Friday, June 20, 2025
Home செய்திகள் காலை உணவு திட்டத்தை கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 முதல் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த திட்டம்: தமிழக அரசு முடிவு

காலை உணவு திட்டத்தை கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 முதல் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த திட்டம்: தமிழக அரசு முடிவு

by Karthik Yash

சென்னை: காலை உணவு திட்டத்தை கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி முதல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல், நகர்ப்புறங்களில் இயங்கி வரும் 1,545 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டது. பட்ஜெட்டில் அறிவித்தபடி நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியில் இருந்து காலை உணவு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi