பிரெட் – 4 துண்டுகள்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது – விருப்பப்படி)
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – சிறிதளவு (நறுக்கியது)
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரெட்டை சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணி வச்சுக்கோங்க. நீங்க கையால கூட கிள்ளி போடலாம். அப்புறம் ஒரு கடாயில எண்ணெய் ஊத்தி சூடு பண்ணுங்க. எண்ணெய் சூடானதும், நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நல்லா வதக்குங்க. வெங்காயம் பொன்னிறமா வதங்கினதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போற வரைக்கும் வதக்கணும்.இப்போ நறுக்கின தக்காளி சேர்த்து, தக்காளி நல்லா மசியற வரைக்கும் வதக்கிட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு எல்லாத்தையும் போட்டு நல்லா மிக்ஸ் பண்ணுங்க. மசாலா எல்லாம் நல்லா வதங்கி வாசனை வந்ததும், பிரெட் துண்டுகளை சேர்த்து மசாலா கூட கலந்து பிரெட் எல்லாம் நல்லா மொறுமொறுப்பாகுற வரைக்கும் வதக்கணும்.பிரெட் நல்லா வதங்கினதும், கொத்தமல்லி தழை தூவி இறக்கிடலாம். அவ்வளவுதான், சூப்பரான பிரெட் புர்ஜி ரெடி…