Saturday, April 20, 2024
Home » விபத்தில் மூளைச்சாவு வேலூரில் இருந்து சென்னைக்கு வந்த தொழிலாளியின் இதயம்

விபத்தில் மூளைச்சாவு வேலூரில் இருந்து சென்னைக்கு வந்த தொழிலாளியின் இதயம்

by Arun Kumar

வேலூர்: வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்தவர் பிரசாந்த் (31), கட்டிடத்தொழிலாளி. இவர் கடந்த 14ம் தேதி மதியம் பைக்கில் சித்தப்பா மகன் சிலம்பரசனுடன் (31) பள்ளிகொண்டா பகுதியில் இருந்து வீட்டுக்கு வந்தபோது, கந்தனேரி கூட்ரோடு அருகே கார் மோதி இருவரும் படுகாயம் அடைந்தனர். வேலூர் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டதில், பிரசாந்த்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க மனைவி கண்ணகி முன்வந்தார். அதன்படி அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவை நேற்று காலை ஆபரேஷன் மூலம் எடுக்கப்பட்டது. இதயம், நுரையீரல் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சிஎம்சி மருத்துவமனைக்கும், மற்ெறாரு சிறுநீரகம் மியாட் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

three × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi