Thursday, September 21, 2023
Home » படகு கவிழ்ந்து மீனவர் பலி: சடலத்துடன் மக்கள் மறியல்

படகு கவிழ்ந்து மீனவர் பலி: சடலத்துடன் மக்கள் மறியல்

by MuthuKumar

திருவொற்றியூர்: சென்னை எண்ணூர் முகத்துவாரக்குப்பத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (33). மீனவரான இவர், நேற்றிரவு 9 மணிக்கு முகத்துவார பகுதியில் மீன்பிடிக்க பைபர் படகில் சென்றுள்ளார். இதன்பிறகு அவர் இன்று காலை வரை வீடு திரும்பவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றொரு பைபர் படகு மூலம் முகத்துவார பகுதிக்கு சென்று தேடினர்.

வடசென்னை அனல் மின் நிலையம் மின் விநியோகத்துக்காக முகத்துவார ஆற்றில் அமைக்கப்படும் உயர்கோபுரம் அருகே அவரது படகு கவிழ்ந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மீனவர்கள் ஆற்றில் இறங்கி தேடியபோது விக்னேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்துகிடப்பது தெரிந்தது. இதனிடையே விக்னேஷ் உயிரிழந்த சம்பவம் கேள்விப்பட்டதும் ஏராளமான மீனவர்கள் முகத்துவார ஆற்றில் அமைக்கப்படும் மின் கோபுர கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

இதனால்தான் அடிக்கடி உயிரிழப்பு நடக்கிறது என்ற கூறி, விக்னேஷின் உடலை கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீசார் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிடப்பட்டது. முகத்துவாரத்தில் மூழ்கி உயிரிழந்த மீனவர் விக்னேஷுக்கு கவிதா என்ற மனைவியும் கனிஷ்மா (6) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?