திமுக அரசுக்கு எப்படியாவது களங்கம் ஏற்படுத்த அமலாக்கத்துறை மூலம் ஒன்றிய பாஜக அரசு முயற்சி என ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார். இதற்கு எல்லாம் சம்மட்டி அடி கொடுப்பது போல் உச்ச நீதிமன்றம் டாஸ்மாக் வழக்கில் உத்தரவு. நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றமே அங்கீகாரம் கொடுக்கிறது. இனிமேலாவது ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.