சென்னை: பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும். இந்தியாவில் ஜனநாயகம் மலர ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும்; முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது. திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து சிலர் பயப்படுகிறார்கள், கண்ணை மூடிக் கொண்டு விதண்டாவாதம் செய்கிறார்கள் என்று பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.