திங்கள்சந்தை: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த ஆற்றூர் சிதறால் பகுதியைச் சேர்ந்தவர் ராபி. இவரது மகன் ஆல்வின் (23). பெங்களூருவில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சொந்த ஊரில் கட்டி உள்ள புதிய வீட்டின் கிரகப்பிரவேசத்துக்கு பெங்களூரில் உடன் வேலை செய்யும் நண்பர் ரயிலில் நாகர்கோவிலுக்கு வந்தார். அவரை அழைத்து வர ஆல்வின், நண்பர் ராகுல் (23) ஆகியோர் ஒரு பைக்கிலும், நண்பர்கள் விபில் திக்கு (24), சேவியர் ஜெனிஷ் (23) ஆகியோர் மற்றொரு பைக்கிலும் சென்றனர். அப்போது பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆல்வின், ராகுல் மீது அவ்வழியாக வந்த டெம்போ ஏறி இறங்கியது. இதில் இருவரும் இறந்தனர்.