தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 3.3 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆறுமுகநேரி அருகே கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த இருந்த பீடி இலைகள் சிக்கின. கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கடற்கரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது மினி லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 3.3 டன் பீடி இலைகளை போலீஸ் பறிமுதல் செய்தது.
இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்!!
0