Wednesday, June 25, 2025
Home செய்திகள்Showinpage தொடரும் வெள்ளப்பெருக்கால் 4வது நாளாக சுருளி அருவியில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தொடரும் வெள்ளப்பெருக்கால் 4வது நாளாக சுருளி அருவியில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

by Neethimaan


கம்பம்: சுருளி அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கால் 4வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. இந்த அருவி சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்குவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தூவானம் அணை, அரிசிப்பாறை, ஈத்தகாடு வனப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அருவியில் கடந்த 26ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள் தடை விதித்தனர். அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கால் 4வது நாளாக இன்றும் தடை நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து கிழக்கு வனச்சரக ரேஞ்சர் பிச்சைமணி கூறுகையில், ‘அதிக நீர்வரத்து காரணமாக வெள்ளப்பெருக்கு தொடர்கிறது. இதனால், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு வரும் நீர்வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்’ என்றார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi