டாக்கா : வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை சேவைகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 2584 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்ட 1,133 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது 9,264 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை 54,416 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில் 44, 191 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதார சேவைகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் அதிபர் ஷேக் அஸீனா சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.