சென்னை: ஆயுத பூஜையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 22ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கபடுகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய மையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம். வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 2,265 சிறப்புப் பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கபடுகிறது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 1,700 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.