உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் நடத்தவிருந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அனுமதி மறுப்பை அடுத்து பேரணியை சில தினங்களுக்கு தள்ளி வைப்பதாக பிரிஜ் பூஷன் சிங் அறிவித்துள்ளார். சமூகத்தில் தீயசக்திகளை விரட்டுவதற்கு மதகுருமார்களுடன் இணைந்து பேரணி நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தார்.