சென்னை: ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆவடி ராணுவ கவச வாகன உற்பத்தி நிறுவனத்தில், இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பரார் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார். அப்போது, கவச வாகனங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும், உரிய நேரத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றார். மேலும், உற்பத்தியில் தன்னிறைவை ஊக்குவித்தலின் அவசியம் குறித்தும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். சிந்தூர் நடவடிக்கையின்போது இத்தகைய அணுகுமுறைகள் பெரிதும் பயனளித்ததை அவர் சுட்டிக்காட்டினார். எதிர்கால போர் சூழல்களுக்கு ஏற்ப, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார். ஆலோசனை கூட்டத்தின் முடிவில் லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பரார் கவச வாகன நிறுவன வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.
ஆவடி கவச வாகன உற்பத்தி நிறுவனத்தில் ராணுவ தென்னிந்திய தளபதி ஆலோசனை
0