சென்னை: சென்னை காமராஜர் சாலையில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் முதன்மை தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தவர் மன்மதன். இவர், பணி ஓய்வு பெற்றார். 1992ம் ஆண்டு நிலைநீர் கோட்டத்தில் பணியை தொடங்கிய இவர், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் திட்ட செயற்பொறியாளாராக இருந்து முக்கிய பங்காற்றி உள்ளார். இத்திட்டம் மூலம் பயன்பெற குளம், குட்டை என சீரமைத்தும் உள்ளார். மதுரை, ஈரோடு, அவிநாசி உள்ளிட்ட இடங்களில் நீர்வளத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் இவர் முக்கிய பங்குவகித்தார்.