அசாமில் வினாத்தாள் கசிவு காரணமாக மார்ச் 24- 29ம் தேதி வரை நடக்க இருந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து
திஸ்பூர்: அசாமில் வினாத்தாள் கசிவு காரணமாக மார்ச் 24- 29ம் தேதி வரை நடக்க இருந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை. கடந்த 6ம் தேதி முதல் அம்மாநிலத்தில் 11ம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது.


