ஹாங்சோவ்: 19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நாளைமறுநாள் தொடங்குகிறது. இதற்குமுன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மகளிர் டி.20 கிரிக்கெட்டில் இன்று நடந்த கால்இறுதி போட்டியில் இந்தியா-மலேசியாவுடன் மோதுகிறது. டாஸ் வென்ற மலேசியா பந்துவீச்சை தேர்வு செய்ய மழைகுறுக்கீடு காரணமாக 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா, 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா27, ஷபாலி வர்மா 67, ஜெமிமா 47, ரிச்சா கோஷ் 21 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய மலேசியா 1 பந்தில் ஒரு ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.