Sunday, June 22, 2025
Home செய்திகள் ஆசிய கோப்பை கிரிக்கெட்; நேபாளம், மழை எதிர்த்தாலும் இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம்

ஆசிய கோப்பை கிரிக்கெட்; நேபாளம், மழை எதிர்த்தாலும் இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம்

by Suresh

பல்லேகலே: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் ஏ-பிரிவில் உள்ள இந்தியா-நேபாளம் அணிகள் இன்று களம் காணுகின்றன.இந்த 2 அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டம். இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி ‘சூப்பர்-4’ சுற்றுக்கு முன்னேறும்.முதல் ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தியதால் 2 புள்ளிகள், இந்தியாவுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி என 3 புள்ளிகளுடன் பாகிஸ்தான் உள்ளது. அதனால் அந்த அணி பிரிவு-ஏவில் முதல் இடம் பிடித்து முதல் அணியாக சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறி விட்டது. எஞ்சிய ஒரு இடத்துக்கான ஆட்டத்தில் ஏ பிரிவில் இருந்து இந்தியா-நேபாளம் இன்று மோதுகின்றன.

இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாத இந்த 2 அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டத்தில் நேபாளம் அறிமுக அணி என்பதால் வெல்வதற்கான வாய்ப்பு குறைவு. அனுபவமற்ற அணியான நேபாளம் தோற்றாலும் அந்த அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் என்றாலும், வென்றாக வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்குதான். அந்த நிச்சயம் வெற்றியின் மூலம் இந்தியா 3 புள்ளிகளுடன் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறி விடும். அதே நேரத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை நிறுத்தினால் 2 புள்ளிகளுடன் ஏ பிரிவில் 2வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு இந்தியா எளிதில் முன்னேறி விடும். அப்படி 2வது இடம் பிடித்தால் சூப்பர்-4 சுற்றில் முதல் ஆட்டத்தில் இந்தியா செப்.10ம் தேதி பாக் அணியை எதிர்கொள்ளும்.

கடைசியாக:
* இந்தியா அணி கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் ஆட்டங்களில் 2ல் அயர்லாந்தை வென்று இருக்கிறது. ஓரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் தோல்வியை சந்தித்துள்ளது. அயர்லாந்து, பாகிஸ்தான் உடனான எஞ்சிய 2 ஆட்டங்கள் மழை காரணமாக கைவிடப்பட்டன.
* நேபாளம் கடைசியாக விளையாடிய 4 சர்வதேச ஒருநாள் ஆட்டங்களிலும் ஐசிசியின் நிரந்தர உறுப்பு நாடுகளுடன்தான் விளையாடி இருக்கிறது. அந்த 4லும் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, பாகிஸ்தான் நாடுகளிடம் தோல்வியை தான் சந்தித்துள்ளது.

நேருக்கு நேர்: இதுவரை இந்த 2 அணிகளும் சர்வதேச களத்தில் சந்தித்ததே இல்லை. இதுதான் முதல் சர்வதேச ஆட்டம். ஆசிய கோப்பையில் நேபாளம் முதல் முறையாக களம் இறங்கியுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi