விருதுநகர்: வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிக்கு விருதுநகர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமாரை, வரிச்சியூர் செல்வம் தரப்பினர் கடந்த 2023ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து உடலை தாமிரபரணி ஆற்றில் வீசினர். இதுகுறித்து செந்தில்குமாரின் மனைவி முருகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த விருதுநகர் கிழக்கு போலீசார், வரிச்சியூர் செல்வம் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விருதுநகர் ஜேஎம்.2 நீதிமன்றத்தில், நீதிபதி ஐயப்பன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வரிச்சியூர் செல்வம், கூட்டாளிகள் கிருஷ்ணகுமார், சதீஷ்குமார், பாலசுப்பிரமணியம், டேனியல் சகாயபாபு, சென்னை புழல் சிறையில் உள்ள லோகேஷ் ஆகிய 6 பேர் ஆஜராகினர்.வரிச்சியூர் செல்வத்தின்
கூட்டாளி மும்பையை சேர்ந்த ஈஸ்வர் சாய் தேஜூ ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதி ஐயப்பன், வழக்கு விசாரணையை மே 16ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.