சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து மருத்துவக் குழு ஒடிசா விரைந்துள்ளது. காயம் அடைந்தவர்களும் சிகிச்சை அளிக்க சென்னையில் தயார் நிலையில் 4 அரசு மருத்துவமனைகள் உள்ளது. ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்க மருத்துவத்துறை உத்தரவு அளித்துள்ளனர்.