புதுச்சேரி: பாக். பயங்கரவாதிகள் மீதான ராணுவ தாக்குதலையடுத்து பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பாதுகாப்புக்கான இந்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி அரசு துணை நிற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.