சென்னை: கம்பம் நகருக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. மதுரை வனப் பாதுகாப்புப் படையின் மூலம் அரிசி கொம்பன் யானையை வனப்பகுதிக்குள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அரிசி கொம்பன் யானை நடமாட்டத்தை கண்காணிக்க இரு பிரிவுகளாக செயல்பட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.