நெல்லை: குட்டியாறு வளப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் யானை நல்ல உடல்நிலையுடன் இயற்கையோடு ஒன்றிவிட்டது என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். எந்த காயமும் இன்றி வனப்பகுதியில் யானை பத்திரமாக விடப்பட்டுள்ளது. யானையை கண்காணிக்க மருத்துவர், உயிரியலாளர் உள்பட 4 பேர் கொண்ட குழு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளனர்.