சென்னை: அறப்போர் இயக்கம் மீதான இரண்டு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மழைநீர் வடிகால் பணி நடக்கும் இடத்தில் மிரட்டியதாகவும் பயிற்சி வழங்குவதாக ஏமாற்றியதாகவும் வழக்குகள் தொடரப்பட்டது. சென்னை திருமங்கலம், பெரவள்ளூர் காவல் நிலையங்களில் 2019ல் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.