தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவுபெற்றுள்ளது. சுமார் 5மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காலத்தில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு செய்ததாக புகாரில் சோதனை நடைபெற்றது.