Monday, June 23, 2025
Home செய்திகள்Showinpage அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் 28ம் தேதி தீர்ப்பு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் 28ம் தேதி தீர்ப்பு

by Arun Kumar

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரனுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது.

சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றபட்டதால், வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் உடனடியாக சாட்சி விசாரணை தொடங்கியது அரசு தரப்பில் 29 சாட்சிகளும் நூற்றுக்கு மேற்பட்ட சான்ற ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.வழக்கின் சாட்சி விசாரணை தினந்தோறும் நடைபெற்றது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அனைத்து நிரூபிக்கபட்டுள்ளது. அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளது. என்று வாதிட்டார். இவர் தான் குற்றம் புரிந்து உள்ளார் எனவே அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார்.குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனவே வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என வாதிட்டார். அனைத்து ஆதாரங்களும் பிறகு வழக்கில் இரு தரப்பும் எழுத்துப் பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கின் தீர்ப்பினை நீதிபதி தள்ளிவைத்தார். வழக்கின் தீர்ப்பை வரும் 28ம் தேதி (மே மாதம்) அறிவிக்கபடும் என தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் அவர் தொடர்ந்தது சிறையில் இருந்து வருகின்றார். அவருக்கு எதிரான வழக்கில் ஆறு மாதங்களுக்குள் விசாரணை அனைத்தும் முடிந்து தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi