சென்னை: அண்ணா பற்றிய கருத்துக்காக அண்ணாமலை வருத்தம் தெரிவிக்கவேண்டும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அண்ணா பற்றிய அண்ணாமலையின் கருத்தால் கூட்டணி கட்சிகளான அதிமுக பாஜக இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த மறுநாளே தமிழ்நாட்டில் அதிமுக பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. நடக்காத விஷயங்களை நேரில் பார்த்ததுபோல மீண்டும் மீண்டும் பேசுவதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.