Saturday, June 21, 2025

ஆன்மீக தகவல்கள்

by Porselvi

திருத்துருத்தி: ஊரின் மையத்தில் உள்ள காளி தினமும் காவிரியில் நீராடி மலர்கொண்டு அன்புடன் அர்ச்சித்த போது இறைவன் காளிக்கு ‘ஓம்’ என்று பிரணவத்தின் பொருளை அருளச் செய்தது. காளி தலை சாய்த்து கேட்கும் சிறிய கல்மேனி உள்ளது.தேப்பெருமா நல்லூர் (திருநாகேஸ்வரம் அருகில்): விஸ்வநாதசுவாமி கோயிலில் அன்னதான தட்சிணா மூர்த்திக்கு காலசந்தி பூஜையில் பழைய அன்னம் நிவேதம் செய்வது.

காஞ்சி மறை நூபுரம்: வேதசிலம்பு: இங்கு யுகமுடிவில் வேதங்கள் வழிபட்டு சிவனுக்கு கால் சிலம்பாயின. பிரம்ம தேவனுக்கு சிவன் தூக்கிய காலை அசைத்து ஒலி மூலம் வேதங்களை உபதேசித்த தலம்.

ரிஷிவந்தியம்: அர்த்தனாரீஸ்வரர் ஆலயத்தில் இந்திரன் அமைத்த லிங்கத்தில் தேன் அபிஷேகம் செய்யும் போது மட்டும் பாணபகுதியில் அம்பிகை நிழலுருவம் தோன்றுகிறது. (அர்த்தஜாம பூஜை)

மண்டோதரி: ராவணன் மனைவி ஓயாது ஐந்தெழுத்தை ஓதும் மகாசிவபக்தி உடையவள். தாம் எப்போது விரும்புகின்றாளோ அப்போது ஈசன் தனக்கு காட்சி அளிக்க வரம் பெற்றிருந்தாள்.

மடிசங்கு: வலம்புரிசங்கை விட 1000 மடங்கு உயர்ந்த மடிசங்கு செங்கை மாவட்டத்தில் பெரும்பேறு தலத்தில் உள்ள இதை பார்வதி தேவியாக போற்றுவர். (வலம்புரி சங்கு – திருமகளாக).
உருத்திரபாசுபதம்: ஈசன் முருகனுக்கு, கந்தனும் சிவனும் மட்டும் ஏந்தவும், மற்றவர்களால் தொடவும் முடியாத உயர்ந்த ஆயுதமான பாசுபதத்தை விட பல மடங்கு வலிமை கொண்டதை அளித்தார்.

திரையில் பீமருத்திரர்: திருமால் வாமன அவதாரம் செய்து மிக சிவ பக்தனை மகாபலியை பாதாளம் அழுத்திய பாவம் தீர லிங்கம் அமைத்து பூஜையும், அதை காக்க முன்புறம் திரையில் பீமசங்கராக உருவம் அமைந்து உள்ளது.

பாண்டி கொடுமுடி: அகத்தியர் தழுவி மகிழ்ந்த விரல் அடையாளம் லிங்க திருமேனியில் உள்ளன. இங்கு சிவன் உமா, திருமண காட்சி அகத்தியருக்கு காட்டினார்.

கிணார் (காஞ்சி): மூலஸ்தானத்தில் லிங்கம் பின்னால் சோமாஸ்கந்தர் பெரிய திருவுருவம் உள்ளது. இதில் சிவன் பின்புறம் பிரம்மா, திருமால், கவரி வீசும் ரம்பை உள்ளனர்.

ஆரூர்: தவம் செய்து மகாலட்சுமி- திருமாலை மணந்து லட்சுமீசர், உமை சிவனை வழிபட்டு பார்வதீஸ்வரர் பெயரில் லிங்கம் அமைத்து, சரஸ்வதி பிரம்மனை அடைந்து சரஸ்வதீஸ்வரர் பெயரில் லிங்கம் உள்ளன.

பிரம்மஹத்தி: பிரம்மத்தை உணர்ந்து பரமஞானிகளாக விளங்கும் பெரியோர்களை அவமதித்து அவர்களை துன்புறுத்தி கொன்று விட்டால் கொன்றவர்களை கொடிய அரக்கன்வடிவில் அவர்களை துன்பம் பிடித்து தொடர்ந்து வந்து துன்புறுத்தும்.

பேரூர் (கோவை): திருமாலும் பிரம்மனும் முறையே பட்டிமுனி, கோமுனி பெயரில் தவம் செய்து சிவன் நடனகாட்சி காண்கிறார்கள் (கோமுனி-பசுமுகம்-பிரம்மன்).

மரமும் தெய்வமும்: அரசமரமும் மும்மூர்த்தி வடிவம் விநாயகரோடு தொடர்புடையது. ஆலமரம் சிவன் வடிவம்; பொதுவுடையார் கோயிலில் ஆலமரமே நடராஜராக வழிபாடு. வேம்பு-பராசக்தி வடிவம். வேங்க, கடம்பு-முருகன் வடிவம்.

செடியின் பெயரில் ஊர்: கச்சி நெறிக்காரைக்காடு, காரைக்காட்டில் இந்திரன் தவம் செய்தபோது சுயம்பு லிங்கமாக ஈசன் தோன்றி அருள்புரிதல். சத்யவிரதநாதர் என்பர். இதேபோல் காரைக்கால், காரைக்குடி, காரைசெடியின் பெயரால் உண்டான ஊர்.

காப்பும் கங்கணமும்: காப்பு தான் மேற்கொள்ளும் செயலுக்கு தீய சக்திகளால் உண்டாகும் தொல்லைகளை விலக்க அணிவது கங்கணம்: நாம் எடுக்கும் செயலில் நிலைத்து நின்று அதனை சிறப்புற செய்து முடிக்க மேற்கொள்ளும் உறுதி.

ருத்திரர்கள்: சிவபுராணம் உலகப்படைப்பிற்கு உதவியாக இருக்கும் பொருட்டு பிரம்மனின் நெற்றியில் இருந்து சிவன் பதினோரு ருத்திரர்களை படைத்தார்.

மதில் சிறப்பு பெயர்: மதுரை 1 மதில் காபாலி, திருவண்ணாமலை-வீரராகவன் திருமதில் வாணதிராயன் திருமதில், ஏகம்பமுடையான் திருமதில்.

ஜெயசெல்வி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi