திருவனந்தபுரம்: ஆந்திராவைச் சேர்ந்த 30 பக்தர்கள் நேற்று தரிசனத்திற்காக ஒரு பஸ்சில் சபரிமலை வந்து இருந்தனர். அதன்படி தரிசனத்தை முடித்துவிட்டு இன்று அதிகாலை ஊருக்கு புறப்பட்டனர். நிலக்கல் அருகே லாகா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பஸ் கவிழ்ந்தது. இதுகுறித்து அறிந்ததும் அந்த பகுதியினரும், போலீசாரும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காயமடைந்த சிறுமி உள்பட 7 பக்தர்களையும் மீட்டு அருகில் உள்ள பெருநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்ைசக்காக சேர்த்தனர்.