ஈரோடு: கோபி அருகே கணபதிபாளையத்தில் கந்துவட்டி வழக்கில் அமமுக நிர்வாகி யுவராஜ்(51) கைது செய்யப்பட்டுள்ளார். மகேஸ்வரி என்பவர் ரூ.30,000 கடன் வாங்கிய நிலையில் அதை வாரம் ரூ.3,000 செலுத்தி வந்துள்ளார். 2 வாரம் கடனை செலுத்த முடியாத நிலையில் மகேஸ்வரியை அமமுக நிர்வாகி யுவராஜ் மிரட்டியதாக புகார் தெரிவித்துள்ளார். மகேஸ்வரி அளித்த புகாரில் அமமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் யுவராஜை போலீசார் கைது செய்தனர்.
கோபி அருகே கணபதிபாளையத்தில் கந்துவட்டி வழக்கில் அமமுக நிர்வாகி கைது
0