Saturday, April 20, 2024
Home » தமிழ்நாட்டில் அரிசி விலைக்கு இணையாக சமையலில் அன்றாட பயன்படுத்தப்படும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்வு

தமிழ்நாட்டில் அரிசி விலைக்கு இணையாக சமையலில் அன்றாட பயன்படுத்தப்படும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்வு

by Dhanush Kumar
Published: Last Updated on

சென்னை: தமிழ்நாட்டில் அரிசி விலைக்கு இணையாக சமையலில் அன்றாட பயன்படுத்தப்படும் பருப்பு உள்ளிட்டவற்றை விளையும் உயர்ந்து வருகின்றது. அரிசி துவரம்ப்பரப்பு, பாசிப்பருப்பு, உளுந்து, சமையல் எண்ணை ஆகியவை அன்றாட சமையலில் தவிர்க்க முடியாதவையாக உள்ளன, இந்நிலையில் கடந்த வாரம் ரூ. 120 என்று விற்கப்பட்ட ஒரு கிலோ துவரம்ப்பரப்பு விலை ரூ. 140 என உயர்ந்துள்ளது. அதேபோல் பாசிப்பருப்பு, உளுந்து, சீரகம் உள்ளிட்டவையின் விலை உயர்ந்து வருகிறது. பருப்பு விலை உயர்ந்து வரும் அதே வேளையில் பனையென்னை, சூரியகாந்தி உள்ளிட்ட சமையல் எண்ணை விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் ரூ. 120 என்ற விற்கப்பட்ட ஒரு லிட்டர் பாமாயில் தற்போது ரூ. 95 விற்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சூரியகாந்தி எண்ணையின்சி விளையும் கணிசமாக குறைந்துள்ளதாக வியாபாரிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ரகத்திற்கு ஏற்ப அரிசி விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விண்ணை முட்டிக் கொண்டு இருக்கும் சூழலில் சமையல் எரிவாயு விலை உயர்வும் பொது மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பட்ஜெட் போட்டு வாழ்ந்து வரும் நடுத்தர குடும்பங்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் கூடுதல் சுமையாக திடீரென அரிசி விலை உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வெளிநாடுகளுக்கு நெல் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு நெல் வரத்து குறைந்துள்ளதாக கூறும் அரிசி ஆலை உரிமையாளர் சங்கம், அரிசி விலை கிலோவிற்கு ரூ.2 முதல் ரூ. 10 வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் நெல் கணிசமான அளவு பொது விநியோகத் திட்டத்திற்காகவே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவு வந்து கொண்டு இருந்த அரிசி திடீரென குறைந்துள்ளதால் தஞ்சாவூரில் அரிசி விலை கிலோவிற்கு ரூ. 6 அதிகரித்துள்ளது. கர்நாடகா பொன்னி அரிசி ரூ.44ல் இருந்து ரூ. 50 ஆகவும் கடந்த நவம்பரில் அறுவடை செய்யப்பட்ட பழைய அரிசி ரூ. 50ல் இருந்து ரூ. 56 ஆகவும் உயர்ந்துள்ளது.

You may also like

Leave a Comment

eight + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi