புதுடெல்லி: பிளிங்கிட் நிறுவனத்துடன் இணைந்து, 10 நிமிடங்களில் வீட்டுக்கே சிம்கார்டு டெலிவரி செய்யும் திட்டத்தை ஏர்டெல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், 10 நிமிடங்களில் வீட்டிற்கே சிம் கார்டு வழங்கும் சேவையை பிளிங்கிட் உடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி உட்பட 16 நகரங்களில் இது அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், உடனடி சிம்கார்டு டெலிவரி செய்வதில் கேஒய்சி விவரங்கள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து தொலைத்தொடர்புத் துறை கேள்வி எழுப்பியுள்ளது. இதையடுத்து மேற்கண்ட சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.