விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நாட்டார்மங்கலத்தில் கடந்த மார்ச் 7ம் தேதியும், மார்ச் 10ல் ஆரோவில் பகுதியிலும் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி., தமிழ்நாடு முதல்வர் குறித்தும், அரசு பற்றியும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் மீது, முதல்வரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகள் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நீதிபதி (பொ) வெங்கடேசன் முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது சி.வி.சண்முகம் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். பின்னர் விசாரணையை டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.