கோவை: கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது: தவெக ஆதவ் அர்ஜுனா அதிமுக குறித்து பேசியதற்கு அவரே மறுபடியும் டிவிட் போட்டு பதில் தந்துவிட்டார். அதிமுக, தேமுதிக இடையே சுமுகமான உறவு உள்ளது. அதனை உடைத்திட யார் நினைத்தாலும் முடியாது. எதையாவது சொல்லி பிரேக் பண்ண நினைக்காதீங்க. அது ஒருபோதும் நடக்காது. அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement



