ஈரோடு: அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என கே.சி.கருப்பணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. களம் காண்கிறது. 2026ல் அதிமுக -பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து கூறி வருகிறார்.
இதற்கு அதிமுகவினர் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன்; அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை. 2026ல் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். கூட்டணிக்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்பது போகப் போகத் தெரியும். எடப்பாடி பழனிசாமி வியூகத்துடன்தான் தேர்தல் கூட்டணி அமைப்பார். என்று கூறினார்.