Sunday, June 15, 2025
Home செய்திகள்Showinpage படிப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: பழநியில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

படிப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: பழநியில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

by Mahaprabhu

பழநி: பழநி படிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயில் அடிவார பகுதிகளில் கடந்த ஜூலை 31ம் தேதிக்குள் கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள வாடகை கடைகளை அகற்ற வேண்டுமென நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. இதன்படி கிரிவீதியில் உள்ள கடைகள் நேற்று அகற்றப்பட்டன. தொடர்ந்து படிப்பாதையில் உள்ள மண்டப இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, டிஎஸ்பி தனஞ்செயன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது படிப்பாதையில் உள்ள மடம் ஒன்றில் அதன் உரிமையாளர் வசந்த் (27) என்பவர், தனது இடம் பட்டா இடம் எனக்கூறி ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரை மீட்டனர். பின்னர் தற்காலிகமாக கடைகளுக்கு சீல் வைப்பதாகவும், நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணலாமென முடிவு எடுக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi