சென்னை: அடையாறு மின் கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும், என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடையாறு கோட்டத்திற்கு உட்பட்ட வேளச்சேரி துணை மின் நிலைய வளாகத்தில் நாளை காலை 10.30 மணியளவில் செயற் பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் மின் சார்ந்த பிரச்னைகள் மற்றும் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வு பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.