Sunday, July 20, 2025
Home செய்திகள் தூக்கில் தொங்கியபடி வாலிபர் சடலம் மீட்பு: சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்

தூக்கில் தொங்கியபடி வாலிபர் சடலம் மீட்பு: சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்

by Ranjith

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கரிமேடு பகுதியில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடப்பதாக செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து போன நபர் யார்? எதற்காக இங்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு என் மகனை காணவில்லை என காஞ்சிபுரம் மாவட்டம், ஒரக்காட்பேட்டை பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் என்பவர் செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் எல்லப்பனை தொடர்பு கொண்டு விவரத்தைச் சொல்லி அவரை நேரில் வரவழைத்து அடையாளம் கண்டறியப்பட்டபோது இறந்து போனது அவரது மகன் ராஜா என்ற ராஜகோபால் (20) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதில், ராஜகோபால் தற்கொலை செய்யக்கூடிய ஆளில்லை. அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi