சென்னை: தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்ஜினியரிங் படிப்பில் சேர மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டில் 18,174 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்துள்ளோருக்கு ரேண்டம் எண் நேற்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஆன்லைன் மூலம் வரும் 20ம் தேதி வரை நடைபெறும். பின்னர் தரவரிசை பட்டியல் 26ம் தேதி வெளியிடப்படும். மேலும் மாணவர்கள் கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.