Tuesday, April 23, 2024
Home » விபத்தில் சிக்கிய‘தி கேரளா ஸ்டோரி’ நடிகை: பாதிப்பில்லை என்று விளக்கம்

விபத்தில் சிக்கிய‘தி கேரளா ஸ்டோரி’ நடிகை: பாதிப்பில்லை என்று விளக்கம்

by Neethimaan

ஐதராபாத்: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் நடித்த நடிகை அடா ஷர்மா உள்ளிட்டோர் விபத்தில் சிக்கிய நிலையில், அவர்கள் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர். ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகை அடா ஷர்மா, ெதலங்கானா மாநிலம் கரீம் நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திரைப்படக் குழுவினருடன் காரில் சென்றார். ஆனால் அவர் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. இதனால் திரைப்படக் குழுவினர் கரீம் நகர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. விபத்தில் யாருக்கு என்ன காயம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், எதிர்மறையான தகவல்களும் சமூக வலைதளத்தில் பரவின.

இதுதொடர்பாக அடா ஷர்மா சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நண்பர்களே! நாங்கள் நன்றாக இருக்கிறோம். விபத்தில் நாங்கள் சிக்கியது குறித்து பலவாறாக செய்திகள் பரப்பப்படுகின்றன. எங்களது ஒட்டுமொத்த குழுவினரும் நலமாக இருக்கிறோம். சீரியஸாக எதுவும் நடக்கவில்லை. எங்களைப் பற்றி நீங்கள் காட்டிய அக்கறைக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் சுதிப்தோ சென் வெளியிட்ட பதிவில், ‘கரீம்நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் எங்களது படத்தைப் பற்றி பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நம்முடைய மகள்களை காப்பாற்றவே இந்தப் படத்தை எடுத்துள்ளோம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

3 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi