சென்னை: பாஜ பிரமுகர் நடிகை குஷ்புவின் எக்ஸ் வலைதள கணக்கு சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இதுதொடர்பாக காவல் துறையில் புகார் அளித்திருந்தார். மேலும் தனது இன்ஸ்டாகிராமிலும் குஷ்பு பதிவிட்டிருந்தார்.தொடர்ந்து எக்ஸ் தளத்தில் ஆக்ட்டிவாக இயங்கி வந்த குஷ்பு, 3 வாரங்களாக எதுவும் பதிவிடமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் குஷ்பு.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “3 வாரங்களுக்குப் பிறகு ஒருவழியாக திரும்ப வந்துவிட்டேன். உங்கள் அனைவரையும் மிஸ் செய்தேன். இந்த 3 வாரங்களில் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. மீண்டும் ஒருமுறை இணைந்து முன்னேறுவோம். கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும், உங்களிடமிருந்து நிறைய கேட்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி. அனைவருக்கும் என் அன்பு” என்று தெரிவித்துள்ளார்.