Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் தன்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய சீமான் மனு தள்ளுபடி

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சீமான் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வல்லுறவு செய்ததாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்தார். 2011-ம் ஆண்டு விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு அளித்திருந்தார். அதில் 2011-ம் ஆண்டு அளித்த புகாரை 2012-ம் ஆண்டிலேயே திரும்ப பெற்று கொள்வதாக அளித்த கடித்தத்தின் அடிப்படையிலும், விசாரணை அடிப்படையிலும் போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் தருவதற்காக விஜயலட்சுமியை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2011-ம் ஆண்டு கொடுத்த புகாரை திரும்ப பெற்றுகொண்டதாகவும், 2023- ல் கொடுத்த புகாரையும் திரும்ப பெற்றுகொண்டதாவும் தெரிவித்தார் தூண்டுதலில் பெயரிலேயே புகார் கொடுக்கப்பட்டதாகவும், எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர் இந்த வழக்கு பாலியல்க் வன்கொடுமை வழக்கு என்றும், ஏற்கவே இது தொடர்பாக விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார் என்று கூறி சீமானுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை அரசு வழக்கறிஞர் முகிலன் சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்தார். மேலும் காவல்துறை இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என விஜயலட்சுமி கேட்டுகொண்டதாக அரசுதரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

வாதங்களை கேட்ட நீதிபதி சீமானின் முதல் மனைவிதான் விஜயலட்சுமியா..? என கேள்வியெழுப்பினார். மேலும் வழக்கை அவர் எதற்காக திரும்ப பெற்றார். தொடர்ந்து புகார்தாரர் வழக்கை திரும்ப பெற்றாலும், காவல்துறை வழக்கை தொடர்ந்து விசாரிக்க அதிகாரம் உள்ளது என நீதிபதி கூறினார். சர்வசாதாரணமாக இந்த வழக்கை முடித்து விடமுடியாது என கூறி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன். சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை 3 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வளசரவாக்கம் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.