2024ல் நடந்த நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 மாணவர்களின் சேர்க்கையை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. முறைகேட்டில் ஈடுபட்ட 42 தேர்வர்களுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள் 26 பேரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறப்பிப்பு. மேலும் 215 மாணவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.