Friday, April 19, 2024
Home » ராணிப்பேட்டையில் இன்று கால்வாயில் கார் கவிழ்ந்து 2 சென்னை சிறுமிகள் பலி: 6 பேர் படுகாயம்

ராணிப்பேட்டையில் இன்று கால்வாயில் கார் கவிழ்ந்து 2 சென்னை சிறுமிகள் பலி: 6 பேர் படுகாயம்

by Neethimaan

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் இன்று காலை கழிவுநீர் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 சிறுமிகள் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை வில்லிவாக்கம் அடுத்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ரசாத்(48). இவரது குடும்பத்தினர் அஜ்முல்நிஷா(40), முகமதுசலீம்(49), ஷாபியா(9), வர்ஷானா(21), முகமதுசலீம் மகள் தபசுல்பாத்திமா(15), அப்துல்ரசாத் மகள் சுமையா(17) ஆகிய 7 பேரும், ஆந்திர மாநிலம் வஜ்ரகரூர் பகுதியில் நேற்று உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து இன்று காலை சென்னைக்கு புறப்பட்டனர். காரை டிரைவர் விஜய் என்பவர் ஓட்டினார். ராணிப்பேட்டை அடுத்த பெல் பைபாஸ் சாலையில் இன்று காலை கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் காருக்குள் சிக்கிக்கொண்டனர். விபத்தை கண்ட பொதுமக்கள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிறுமிகள் தபசுல்பாத்திமா, சுமையா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தனர். மற்ற 6 பேரும் காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுமிகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 2 சிறுமிகள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

five × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi