தென்காசி: தென்காசி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தில் இருந்து சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இடைக்கால் பகுதியில் பேருந்து சென்றபோது பின்பக்க சக்கரங்கள் திடீரென்று கழன்று சாலையில் ஓடின. ஓட்டுநர் சாமர்த்தியமாக சாலையோரமாக பேருந்தை உடனடியாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Advertisement



