சுருளியில் சூப்பராக கொட்டுது தண்ணீர் சுற்றுலாப்பயணிகள் கும்மாளம்
2017-06-29@ 14:03:23

கம்பம் : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இரு மாதங்களுக்கு பின் சுருளி அருவியில் தண்ணீர் ஜோராகக் கொட்டுகிறது. தேனி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களில் முக்கியமானது சுருளி அருவி. மழைக்காலங்களில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணை, ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதியிலிருந்து இதற்கு தண்ணீர் வரத்து இருக்கும்.
மழை இல்லாததாலும், பராமரிப்புப் பணிக்காக தூவானம் அணை தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டதாலும், சுருளி அருவிக்கு முற்றிலும் நீர்வரத்து நின்று போனது. இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தற்போது ஹைவேவிஸ் மலை பகுதியில் தென்மேற்குப் பருவமழை பெய்து வருவதால் சுருளி அருவிக்கு தண்ணீர் வர தொடங்கியது. இதனால் இரண்டு மாதங்களுக்கு பின் மீண்டும் சுருளி அருவியில் தண்ணீர் ஜோராகக் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வர தொடங்கி உள்ளனர்.
மேலும் செய்திகள்
சின்னசுருளி அருவியில் நீர்வரத்து சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிப்பு
நீர்வரத்து அதிகரிப்பால் பொங்கி வழியும் சுருளி அருவி!
12 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் குஷி
மலைப்பகுதியில் மழை சுருளி அருவிக்கு வந்தது ஊற்றுநீர்
கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு குளிப்பதற்கு தடை
கும்பக்கரை அருவியில் தண்ணி வருது.. ஆனா குளிக்க முடியாது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்