தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்
2012-01-21@ 11:16:07

தஞ்சை பெரிய கோயில் & தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்
தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால்
கட்டப்பட்டது. இந்தியாவின் சிற்பக் கலைக்கு தஞ்சைப் பெரிய கோயில்தான் முகவரி. 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000
வயது பூர்த்தியாகியது. பிரகதீஸ்வரர் கோயில் கொண்டுள்ள இந்த ஆலயத்தின் கருவறையில் இருந்தே இதன் விமானம் எழுந்து நிற்பது இதன் தனிச் சிறப்பு. விமானத்தின் உயரம் 216 அடிகள். இதன்
மேலுள்ள கலசம் வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதன் நிழல் தரையில் விழாதது இன்னொரு சிறப்பு. கருவறைக்கு எதிரில் 12 அடி உயரம், 19 அடி நீளம், 8 அடி அகலத்தில் மிகப்பெரிய நந்தி
இருக்கிறது. உட்புறச் சுவர்களில சோழர் மற்றும் நாயக்கர் கால ஒவியங்கள் இடம் பெற்றுள்ளன. அஜந்தா ஓவியங்களைப் போல இவையும் புகழ்பெற்றவை.
தாராசுரம்
தஞ்சையில் இருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ள கோயில் இது. சிவபெருமான் எழுந்தருளியுள்ள இந்தக் கோயிலை இராஜேந்திர சோழன் கட்டியுள்ளார். பட்டு நெசவுக்குப் பெயர் பெற்ற ஊர் தாராசுரம்.
மகாமகம் திருநாள்
கும்பகோணம் மகாமகக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாபெரும் திருநாள் ஆகும். வழக்கமாக மாசிமாதம் பௌர்ணமி அன்று மகாமகம் வரும். இதுவே 12 ஆண்டுகளுக்கு ஒரு
மகம். இந்த மகாமகத் திருநாளின் போது இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் இந்தக் குளத்தில் புனித நீராட கூடுவார்கள். தொலைபேசி: - 0435-2420276.
நாயக்கர் தர்பாரஹால் அருங்காட்சியகம் மற்றும் இராஜராஜ சோழன் அருங்காட்சியகம்
இரண்டு அருங்காட்சியகத்திலும் சோழர்கால சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அற்புதமான செப்பு சிற்பங்களை இங்கு காணலாம்.
சரபேஸ்வரர் ஆலயம்
கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் திருப்புவனத்தில் இந்தக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டியுள்ளான். இந்த தெய்வத்தை வந்து வழிபட்டால்
பில்லி சூனியம் போன்ற கேடுகள் அகலும் என்பது நம்பிக்கை.
சிவகங்கைப் பூங்கா
தஞ்சை பெரிய கோயிலின் வடபுறமாக உள்ளது. அழகிய செடிகள், மலர்கள், பறவைகள் விலங்குகள் இன்றும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பூண்டி மாதா கோயில்
மிகவும் புகழ் பெற்ற கத்தோலிக்கத் தேவாலயம். தொலைபேசி: - 04364 - 265426.
இராஜராஜன் மணி மண்டபம்
தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது கட்டப்பட்டது. அழகிய பூங்காவுக்குள் இது அமைந்துள்ளது.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு மண்டபம்
விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தன் கவிதைகளை ஏழை எளிய பாட்டாளி மக்களுக்காகவே அர்ப்பணித்த மக்கள் கவிஞர் 13.4.1930 இல் பிறந்து 29 வயதிலேயே அமரர் ஆகிவிட்ட இந்த மகாகவியின்
நினைவு மண்டபம் பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் நாடியம்மாள்புரத்தில் அமைந்துள்ளது.
புலியூர் வியாகரபூரீஸ்வரர் கோயில்
நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் தஞ்சையிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோயில் இராமர் மடம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி முக்கால் கி.மீ. வடக்கு நோக்கிச்
சென்றால் இந்தக் கோயிலைக் காணலாம். காமதேனு பசு இங்குள்ள சிவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. தென் சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாகரபுரி என்று இந்த ஊருக்கு மற்றொரு
பெயரும் உண்டு.
சரஸ்வதி மஹால் நூலகம்
இந்தியாவில் கீழை நாட்டு ஆவணங்களின் மூலப்படிகள் பாதுகாக்கப்படு
Tags:
தஞ்சாவூரபிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!