நீலகிரி நீராவி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகள்!
2019-12-10@ 15:28:13

குன்னூர்:உலக புகழ் பெற்ற நீலகிரி மலை ரெயில் யுனஸ்கோ அங்கீகாரம் பெற்றது. இந்த மலை ரெயில் 1908-ம் ஆண்டு முதல் 111-வது ஆண்டாக தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.மேட்டுப்பாளையத்தில் இருந்து பல மலைகள், செங்குத்தான பாதை வளைவுகள், சுரங்கப்பாதைகள் என 46 கி.மீ. தூரம் கடந்து ஊட்டிக்கு செல்கிறது.
இதனை தொடர்ந்து லண்டன், ரஷியா, அர்ஜென்டினா, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 71 பேர் குன்னூர் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். இதில் 12 குழந்தைகள் முதல் 84 வயதான முதியவர்களும் அடங்குவார்கள்.பின்னர் நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட மலை ரெயிலில் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர். இதற்காக மலை ரெயிலை ரூ. 2 லட்சத்து 766-க்கு வாடகைக்கு எடுத்து இருந்தனர்.
முன்னதாக குன்னூர் நீராவி என்ஜின் பணிமனைக்கு சென்று நீராவி என்ஜின் குறித்து விசாரித்து குறிப்புகளை எடுத்து கொண்டனர்.ஊட்டிக்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா ஆகிய இடங்களை கண்டு ரசித்தனர்
மேலும் செய்திகள்
மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!
இரண்டாம் சீசன் முடிந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு
ஊட்டி தாவரவியல் பூங்காவில் வண்ண நிறங்களில் பூத்து குலுங்கும் கள்ளி செடி : சுற்றுலா பயணிகள் ஈர்ப்பு
ஊட்டியில் கிரேட்டர் கார்மரண்ட் பறவைகள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!