வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலா பயணிகள் ரசிப்பு
2019-11-13@ 18:05:57

வால்பாறை: வால்பாறையில் வடகிழக்குப் பருவமழை இடைவெளி விட்டு பெய்கிறது. இதனால், பி.ஏ.பி., அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் ஆகிய இரு அணைகளும் நிரம்பும் நிலையில் உள்ளது. இந்நிலையில், பருவமழையால் வால்பாறையில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில், காலை, மாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, அக்காமலை, கவர்க்கல், வாட்டர்பால்ஸ், சின்கோனா உள்ளிட்ட எஸ்டேட்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் நிலவும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டு வாகனங்களை மெதுவாக இயக்குகின்றனர். பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால், தொழிலாளர்கள் கையில் உறை அணிந்து தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேயிலை எஸ்டேட் பகுதியில் காலை, மாலை நேரத்தில் நிலவும் பனிப்பொழிவை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
கோத்தகிரியில் ஆர்ப்பரிக்கும் உயிலட்டி நீர்வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
வால்பாறையில் மூடுபனி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தொடர் விடுமுறை முடிந்தும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையவில்லை
தொடர் விடுமுறையையொட்டி கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மூன்று நாட்களில் ரூ4.62 லட்சம் வருவாய்
தொடர் விடுமுறையால் மக்கள் படையெடுப்பு : சுற்றுலாப் பயணிகளை ஈர்த்திழுக்கும் வாகமண்
51 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் நாளை திறப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!