12 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் குஷி
2018-08-27@ 16:30:19

தேனி : தண்ணீர் வரத்து குறைந்தததால் சுருளி அருவியில் 12 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் சுருளி அருவி உள்ளது. ஹைவேவிஸ், மேல்மணலாறு, வெண்ணியாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பெய்து வரும் கனமழை காரணமாக சுருளி அருவியில் தண்ணீர் கொட்டியது. இதனால் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் ஆக.14ம் தேதி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
அத்துடன் படிக்கட்டுகளில் செல்வதற்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
சுருளி அருவியின் மழை வெள்ளப்பகுதியாக உள்ள ஹைவேவிஸ் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை இல்லாததால், வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் 12 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் நேற்று குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளனர்.
மேலும் செய்திகள்
சின்னசுருளி அருவியில் நீர்வரத்து சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிப்பு
நீர்வரத்து அதிகரிப்பால் பொங்கி வழியும் சுருளி அருவி!
மலைப்பகுதியில் மழை சுருளி அருவிக்கு வந்தது ஊற்றுநீர்
கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு குளிப்பதற்கு தடை
சுருளியில் சூப்பராக கொட்டுது தண்ணீர் சுற்றுலாப்பயணிகள் கும்மாளம்
கும்பக்கரை அருவியில் தண்ணி வருது.. ஆனா குளிக்க முடியாது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்