இன்று முதல் சேலம் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை சேவை!
2017-12-26@ 14:04:05

சேலம்: சேலம் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு அன்றாடம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் வசதிக்காக ஐந்து நடைமேடைகளிலும் இலவச வைஃபை சேவை அளிக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து, பல இடங்களில் மோடம் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தது.
தற்போது அந்தப் பணிகள் முடிவடைந்து விட்டதை அடுத்து இலவச வைஃபை சேவை இன்று தொடங்கப்பட்டது. பயணிகள் டிக்கெட்டைப் பெறும் போது அந்த சீரியல் எண்ணுடன், இலவச வைஃபை சேவைக்கான ஓடிபி எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு அச்சிடப்பட்டிருக்கும். ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஒன் டைம் பாஸ்வேர்டு மாறிக் கொண்டே இருக்கும். அதைப் பயன்படுத்தி பயணிகள் ஒரு மணிநேரம் இலவசமாக வைஃபை சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் செய்திகள்
2020ல் விடுதி சமையலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு
ஊராட்சி பொது நிதியில் இருந்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம்: ஊரக வளர்ச்சி இயக்குநரகம் உத்தரவு
வேறொரு பெண்ணுடன் தொடர்பு என மனைவி புகார் போலீஸ் விசாரணையின்போது விஷம் குடித்து கணவன் தற்கொலை: அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்
தற்காலிக ஆசிரியர்கள் நியமன தடையை நீக்க கோரி முறையீடு: 8ம் தேதி விசாரணை
இலங்கை தமிழர்கள் 8 பேர் தனுஷ்கோடி வருகை
நெல்லையில் முதல் குறைதீர் கூட்டம் ஊர்காவல் படையில் திருநங்கைகளுக்கு வேலை: கலெக்டர் தகவல்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!